சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கு; உடனே பதிலளிக்க வேண்டும்; தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிடும் போது

இந்த வழக்கானது 2018ல் தாக்கல் செய்யப்பட்டது என குறிப்பிட்டார் மேலும் இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் ஐந்து மாநிலங்களுக்கு, 2019ல் உத்தரவிட்டது. இந்த வழக்கில் பஞ்சாப் அரசு மட்டும் பதில் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழகம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் இதுவரை பதில் தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கில் ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, தமிழகம் உட்பட, நான்கு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது. அவ்வாறு பதில் தாக்கல் செய்யாவிட்டால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது

அபராதத் தொகை மிகவும் குறைவு என்றாலும், தங்களுடைய பொறுப்பை இந்த மாநிலங்கள் உணர்வதற்காக இது விதிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை, நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் நிலவரம் தொடர்பாக, தனியாக துணைக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட அமர்வு, அதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Sudha

Recent Posts

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

17 minutes ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

18 minutes ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

36 minutes ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

51 minutes ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

This website uses cookies.