கொரோனா தடுப்பூசிகளில் பிரதானமாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது உலகளவில் பெரும் சர்ச்சையானது.
இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து இதே ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரிக்கும் கேன்சர் மருந்து குறித்து முக்கிய தகவலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் DCGI தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கேன்சர் நோயாளிகளின் கீமோதெரபி சிகிச்சைக்கு அளிக்கும் ஓலாபாரிப் (Olaparib) மருந்தை DCGI ஆய்வுக்கு உட்படுத்தியது.
ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளை அடுத்து, தற்போது மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு அனுப்பிய உத்தரவில், ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை திரும்ப பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிப்பட்டுள்ளது.
மே 16 அன்று DCGI குழுமத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பிய தகவலின்படி, அஸ்ட்ராஜெனெகா ஃபார்மா இந்தியா லிமிடெட் நிறுவனம், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மற்ற சில புற்றுநோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்படும் ஓலாபாரிப் (Olaparib)100மிகி மற்றும் 150மிகி மாத்திரைகளை திரும்ப பெறுவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தும், குறிப்பிட்ட கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி பல்வேறு கட்ட சிகிச்சையில் ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை தொடர்ந்து அளிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, விரைவாக, ஓலாபாரிப் (Olaparib) 100mg மற்றும் 150mg மாத்திரைகளை சந்தைப்படுத்துதலை திரும்பப்பெற வேண்டும் என அனைத்து உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தி DCGI சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் படிக்க: கடவுள் நம்பிக்கை இல்லாத போது கோவில் நிர்வாகம் மட்டும் எதுக்கு..? திமுகவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
இந்த ஓலாபாரிப் (Olaparib) 100 mg மற்றும் 150 mg மாத்திரைகள் கடந்த ஆகஸ்ட் 13, 2018 அன்று கருப்பை புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக DCGI ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.