இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், செர்பியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கொரோனா லாக் டவுன் சமயத்தில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது.ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடாஷா ஸ்டான்கோவிக், தமிழில் விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் பல்வேறு விளம்பரங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளார்.
பார்ட்டி ஒன்றில் சந்தித்த இருவரும் சில மாதங்கள் நட்பில் இருந்து, பின்னர் காதலர்களாக மாறினர். இதன்பின் இருவரும் “Living Together” உறவில் இருந்த போது, நடாஷா கர்ப்பமானார். அதன்பின் இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தைக்கு அகஸ்தியா எனப் பெயரிட்டனர்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இருவரும் தனது மகன் அகஸ்தியா முன்பாக மீண்டும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.
ஹர்திக் பாண்ட்யா – நடாஷா இடையிலான உறவு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரியவுள்ளதாக தகவல் பரவியது.இந்த செய்தியை இருவரது தரப்பும் உறுதி செய்யாத நிலையில், ஹர்திக் பாண்டியா பல முக்கிய நிகழ்வுகளில் குறிப்பாக அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் தனியாக கலந்து கொண்டார்.
சாதாரண நிகழ்ச்சிகளில் கூட மனைவியுடன் ஹர்திக் பாண்டியா பங்கேற்ற நிலையில் இந்த மாற்றம் பல யூகத்திற்கு வழி வகுத்தது. இந்த நிலையில் மனைவி நடாஷாவை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு நடாஷாவும் நானும் பரஸ்பரம் பிரிவதற்கு முடிவு செய்துள்ளோம். இருவரின் நலனுக்கும் இந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று கருதுகிறோம். குடும்பத்துடன் மகிழ்ச்சியுடனும், பரஸ்பரம் மரியாதையுடனும் இருந்த எங்களுக்கு இது மிகக் கடினமான முடிவு.
எங்கள் மகன் அகஸ்தியா என்னுடனும் நடாஷா உடனும் இருப்பார். அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ளோம். இந்த கடினமான தருணத்தில் எங்களது தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்து எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கோருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.