தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசி இந்திய அணியில் இடம் பிடித்தார்இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் துல்லியமாக பந்து வீசி மேக்ஸ்வெல் டிவிலியர்ஸ் போன்றோரையும் திணறடித்தார்.
காலில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் 14வது தொடரில் இவர் பங்கேற்கவில்லை
சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பேசிய நடராஜன் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு நான் முதன் முதலில் செல்லும்போது தமிழ் தவிர எனக்கு எதுவும் தெரியாது. அங்கு முழுவதுமாக ஹிந்திதான். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி தனியாக இருப்பதைப்போல் உணர்ந்தேன். அதனால் தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் எனக்கு விளையாட்டு ரொம்பப் பிடிக்கும் என்பதால் கஷ்டங்களைத் தாண்டி விளையாடுவேன் என்று பேசினார்.அவரது ஹிந்தி பற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் இவருக்கான சிறப்பான இடம் வழங்கப்படவில்லை என்பது போன்ற தகவல்கள் பரவி வந்தது.இதைக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரிக்கெட் வீரர் நடராஜன் எனக்கு ஏற்பட்ட சில காயங்களால் என்னால் அணியில் விளையாட முடியவில்லை, எனக்கான வாய்ப்பு பிசிசிஐ ஆல் மறுக்கப்பட்டது எனச் சொல்வது தவறானது என்றார். மேலும் ஹிந்தி பற்றிய அவரின் பேச்சு குறித்து கேட்ட போது என்னுடைய வாழ்வில் நான் கடந்து வந்த பாதையைப் பற்றி மட்டுமே பேசினேன் என்று பதில் அளித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.