திமுக ஆட்சிக்கு ஆபத்து? சுற்றி வளைத்த ED… நாட்கள் எண்ணப்படுகின்றன : பரபரப்பை கிளப்பிய ஹெச் ராஜா!!!
தமிழ்நாட்டில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரிகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மணல் குவாரிகள் குறித்து, ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து விவரங்களை திரட்டினர்.
அதன் அடிப்படையில், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளுவதை உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்கவில்லை என அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் வரும் நாட்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராவார்கள் எனத் தெரிகிறது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “10 மாவட்ட ஆட்சியர்களுக்கு ED சம்மன். தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகார வர்க்கம் முழுவதும் ஊழல் மயம். தமிழக அரசு தப்புவது கஷ்டம். நாட்கள் எண்ணப்படுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.