பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 23 வயது மதிக்கத்தக்க இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவரின் பாதி சிதைந்த உடலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாகப் மீட்டனர், இறந்தவரின் தாயையும் மீட்டனர், அவர் தன் மகன் இறந்தது தெரியாமல் தனது அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து வந்துள்ளார்.அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது.
அந்த பெண்மணி ஆர்டர் செய்த ஜூஸை டெலிவரி செய்ய அபார்ட்மெண்டிற்குச் சென்ற உணவு டெலிவரி செய்யும் ஊழியர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தந்தார்.
போலீசார் அடுக்குமாடி குடியிருப்பை உடைத்து பார்த்த போது அந்தப் பெண், படுக்கையறையில் தனது மகனின் இறந்த உடலை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை வழக்கம் போல கவனித்து வந்துள்ளார்.
இறந்த வாலிபர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அவர் தனது தாய் உமா உடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது தந்தை பூடானில் பணிபுரிந்து வருகிறார்.
விசாரணையில், விஷ்ணு தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில். இன்டர்ன்ஷிப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் கடுமையான எடை இழப்பு காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக பணிக்கு செல்லவில்லை என சொல்லப் படுகிறது.
கவலையடைந்த அவரது நண்பர்கள் கடந்த வாரம் அவரைப் பார்க்க வந்தபோது, விஷ்ணு அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார், மேலும் அவரது தந்தை கடைசியாக ஜூலை 24 அன்று தொலைபேசியில் அவருடன் பேசினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விஷ்ணு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விஷ்ணுவின் மரணத்திற்கான காரணத்தை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உமாவை குரோம்பேட்டையில் உள்ள காப்பக்கத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பூட்டானில் இருந்து வந்த உமாவின் கணவர் போலீசாரின் ஒப்புதலோடு உமாவை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.