அழுகிய நிலையில் மகன் சடலம்… அருகில் இருந்த தாய் : பல்லாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் திக் திக்..!!

பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 23 வயது மதிக்கத்தக்க இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவரின் பாதி சிதைந்த உடலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாகப் மீட்டனர், இறந்தவரின் தாயையும் மீட்டனர், அவர் தன் மகன் இறந்தது தெரியாமல் தனது அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து வந்துள்ளார்.அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது.

அந்த பெண்மணி ஆர்டர் செய்த ஜூஸை டெலிவரி செய்ய அபார்ட்மெண்டிற்குச் சென்ற உணவு டெலிவரி செய்யும் ஊழியர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தந்தார்.

போலீசார் அடுக்குமாடி குடியிருப்பை உடைத்து பார்த்த போது ​​​​அந்தப் பெண், படுக்கையறையில் தனது மகனின் இறந்த உடலை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை வழக்கம் போல கவனித்து வந்துள்ளார்.

இறந்த வாலிபர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அவர் தனது தாய் உமா உடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது தந்தை பூடானில் பணிபுரிந்து வருகிறார்.

விசாரணையில், விஷ்ணு தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில். இன்டர்ன்ஷிப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் கடுமையான எடை இழப்பு காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக பணிக்கு செல்லவில்லை என சொல்லப் படுகிறது.

கவலையடைந்த அவரது நண்பர்கள் கடந்த வாரம் அவரைப் பார்க்க வந்தபோது, ​​​​விஷ்ணு அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார், மேலும் அவரது தந்தை கடைசியாக ஜூலை 24 அன்று தொலைபேசியில் அவருடன் பேசினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

விஷ்ணு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விஷ்ணுவின் மரணத்திற்கான காரணத்தை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

உமாவை குரோம்பேட்டையில் உள்ள காப்பக்கத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பூட்டானில் இருந்து வந்த உமாவின் கணவர் போலீசாரின் ஒப்புதலோடு உமாவை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினார்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.