அழுகிய நிலையில் மகன் சடலம்… அருகில் இருந்த தாய் : பல்லாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் திக் திக்..!!

பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 23 வயது மதிக்கத்தக்க இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவரின் பாதி சிதைந்த உடலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாகப் மீட்டனர், இறந்தவரின் தாயையும் மீட்டனர், அவர் தன் மகன் இறந்தது தெரியாமல் தனது அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து வந்துள்ளார்.அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது.

அந்த பெண்மணி ஆர்டர் செய்த ஜூஸை டெலிவரி செய்ய அபார்ட்மெண்டிற்குச் சென்ற உணவு டெலிவரி செய்யும் ஊழியர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தந்தார்.

போலீசார் அடுக்குமாடி குடியிருப்பை உடைத்து பார்த்த போது ​​​​அந்தப் பெண், படுக்கையறையில் தனது மகனின் இறந்த உடலை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை வழக்கம் போல கவனித்து வந்துள்ளார்.

இறந்த வாலிபர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அவர் தனது தாய் உமா உடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது தந்தை பூடானில் பணிபுரிந்து வருகிறார்.

விசாரணையில், விஷ்ணு தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில். இன்டர்ன்ஷிப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் கடுமையான எடை இழப்பு காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக பணிக்கு செல்லவில்லை என சொல்லப் படுகிறது.

கவலையடைந்த அவரது நண்பர்கள் கடந்த வாரம் அவரைப் பார்க்க வந்தபோது, ​​​​விஷ்ணு அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார், மேலும் அவரது தந்தை கடைசியாக ஜூலை 24 அன்று தொலைபேசியில் அவருடன் பேசினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

விஷ்ணு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விஷ்ணுவின் மரணத்திற்கான காரணத்தை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

உமாவை குரோம்பேட்டையில் உள்ள காப்பக்கத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பூட்டானில் இருந்து வந்த உமாவின் கணவர் போலீசாரின் ஒப்புதலோடு உமாவை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினார்.

Sudha

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

8 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

8 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

9 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

9 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

9 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

10 hours ago

This website uses cookies.