காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி மற்றும் அறந்தாங்கி ஒன்றியங்களில் காவிரி நீரின் கடைமடை பகுதியின் மூலம் சுமார் 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த விவசாயத்திற்கு தேவையான நீரானது காவேரி கல்லணை கோட்ட கால்வாய்கள் மூலமாக கிடைக்கப்பெற்று அதன் மூலம் கடைமடை பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஏரிகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு சம்பா மற்றும் குருவை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான சம்பா சாகுபடி தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரானது, தங்களது விவசாயத்திற்கு வேண்டிய அளவு கிடைக்காததால், ஏரிகள் மற்றும் குளங்கள் நீர் இல்லாமல் வறண்டு காய்ந்து விட்டன. இதனால், விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால், தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பெற்று தர வேண்டிய திமுக அரசு சுமூக போக்கை கடைபிடித்து தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றது.
இதனை கண்டிக்கும் விதமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் உள்ள வர்த்தக சங்கத்தினர் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை ஆதரிக்கும் விதமாக அறந்தாங்கி அடுத்த நாகுடி,சுப்பிரமணியபுரம் பகுதி வர்த்தக சங்கத்தினர் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.