தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் மீது அவ்வப்போது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஆர்கே நகர் திமுக எம்எல்ஏ சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி, சென்னை தண்டையார்பேட்டையில் எம்எல்ஏ எபினேசர் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கார்ப்பரேஷன் ஊழியர் வெறும் கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி சுத்தம் செய்தாக குறிப்பிடப்பட்ட அந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியிருந்தது.
அந்த வீடியோவை சமூக செயற்பாட்டாளரான ஷாலின் மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, துப்புரவு பணியாளரை வெறும் கையால் சாக்கடையை அள்ள திமுக எம்எல்ஏ வற்புறுத்தியிருக்கிறார். இது மனித கழிவுகளை மனிதர்களையே அள்ள வைப்பதற்கு எதிரான சட்டத்தை மீறும் செய்ல் என்றும், இது புதிதாக நடக்கும் நிகழ்வல்ல, ஆனால் முதல்முறையாக பொது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் மாநில அரசோ அதனை கண்டுகொள்ளவில்லை என காட்டமாக பதிவிட்டிருந்தார்.
ஷாலின் மரியா லாரன்ஸின் இந்த ட்விட் வைரலான நிலையில் திமுக எம்எல்ஏ எபினேசர் அந்த குற்றச்சாட்டை மறுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது நியாமற்ற குற்றச்சாட்டு, துப்புரவு பணி மேற்கொள்ளும்படி கார்பரேஷன் ஊழியரை எம்எல்ஏ வற்புறுத்தினார் என்ற பதிவை திரும்ப பெறாவிடில் இது குறித்து புகார் கொடுக்க நேரிடும், என்னிடம் முழு வீடியோவும் உள்ளது. நான் அந்த ஊழியரிடம் பேசவே இல்லை, அது முதலில் சாக்கடை கழிவே இல்லை, அது குடிநீர் தேக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த செய்தியில் எம்எல்ஏ வற்புறுத்தினாரா என இருக்கிறதா? பாதி எடிட் செய்யப்பட்ட செய்தியை வைத்து எப்படி நீங்களாக ஒரு முடிவுக்கு வருவீர்கள்? கார்பரேஷன் JEஇடம் நீங்க செய்யலைனா நான் வேணா சுத்தம் பண்ணட்டுமா கைவிட்டு என்று தான் கூறினேன் என ஆர்கே நகர் எம்எல்ஏ எபினேசர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.