திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் அர்ஜுன் பட்டாசு கடை என்ற கடை செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக குடியிருப்பு பகுதிகளில் இந்தப் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, கடையில் இருந்த பட்டாசுகள் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இதில், தீவிபத்தில் சிக்கி ஒருவர் உடல்கருகி உயிரிழந்தார்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்பதால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் வந்து தற்போது பட்டாசு கடைகள் உள்ள தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாசு கடைக்குள் யாரும் உள்ளார்களா..? என்பது குறித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். குடியிருப்பு பகுதியில் அருகே பட்டாசு கடை இருந்ததால், மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மக்களும் வெளியே ஓடினர். மேலும், பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.