அமைச்சர் உதயநிதியுடன் ஆய்வில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்.. பாஜக எழுப்பிய கேள்வி.. வெடித்தது சர்ச்சை!!

அமைச்சர் உதயநிதியுடன் ஆய்வில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்.. பாஜக எழுப்பிய கேள்வி.. வெடித்தது சர்ச்சை!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பெருமழை கொட்டியது. இப்பெருமழையால் குளங்கள் நிரம்பின; அணைகள் நிரம்பின; உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடிநீர் பாய்ந்தோடியது.

இப்பெருவெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாகின. இம்மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தமது சொந்த ஊரான புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தத்தளித்து வருவதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது.

கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் பணியாற்றினார். மேலும் “கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர். வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்” எனவும் சமூக வலைதளங்களில் படங்களும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாஜகவினர் “உதயநிதி வச்சு படம் பண்ணினால், இவ்ளோ அதிகாரம் யார் கொடுத்தார்கள்?” என மாரி செல்வராஜ் பேட்டிக்கு எதிராக கேள்வி எழுப்பினர். அதேபோல “Dear Mr. @Udhaystalin sir can you please explain what’s the role for Mari Selvaraj here? Is he a IAS, minister or govt official? Why is he with you when you’re going for official government work? எனவும் கேள்வி கேட்டிருந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நிற்பது குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு திமுகவினரும் சமூக வலைதளங்களில் பதிலடியாக “மாரி செல்வராஜ் உதயநிதி கூட நின்னு உதவி செய்யறது கஷ்டமா இருக்கா இல்ல மாரி செல்வராஜ் உதவி பன்றது புடிக்கலையா” என்றும் “சென்னை நடிகர்கள் சென்னை மக்களுக்கு உதவுறது சரின்னா, தனது சொந்த மாவட்டமான திருநெல்வேலி மக்களுக்கு மாரி செல்வராஜ் உதவுறது மட்டும் எப்படி தவறாகும்?” எனவும் பதில் எழுப்புகின்றனர்.

திமுகவின் கவிஞர் சல்மா தமது எக்ஸ் பக்கத்தில், மாரி செல்வராஜ் தன் கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காக களத்தில் நிற்பதை பார்த்து கேலி செய்கிறார்கள்.

ஓராயிரம் மக்கள் ,என்ஜிஓக்கள் தனியாகவும், அரசோடும், கட்சியோடும் இணைந்து கொண்டு உதவுகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்னை? என பதில் கொடுத்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

8 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

8 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

8 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

9 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

10 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.