திமுகவில் சென்னை வடக்கு மாவட்டம் 4 ஆக பிரிப்பு : புதிய நிர்வாகிகள் நியமனம்!!
18 November 2020, 4:16 pmதிமுகவில் சென்னை வடக்கு, வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு ஆகிய மாவட்டங்களை பிரித்து புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை வடக்கு மாவட்டம், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1.சென்னை வடகிழக்கு மாவட்டம்
- மாதவரம்
- திருவொற்றியூர்
2.சென்னை வடக்கு மாவட்டம்
- இராதாகிருஷ்ணன் நகர்
- பெரம்பூர்
- இராயபுரம்
சென்னை வடகிழக்கு மாவட்டம்
பொறுப்பாளர் – எஸ். சுதர்சனம்
சென்னை வடக்கு மாவட்டம்
பொறுப்பாளர் – தா.இளையஅருணா
- சென்னை மேற்கு மாவட்டம்
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
- ஆயிரம்விளக்கு
- அண்ணா நகர்
4. சென்னை தென்மேற்கு மாவட்டம்
- தியாகராயர் நகர்
- மயிலாப்பூர்
சென்னை மேற்கு மாவட்டம்
பொறுப்பாளர் – நே.சிற்றரசு,
சென்னை தென்மேற்கு மாவட்டம்
பொறுப்பாளர் – மயிலை த.வேலு ஆகியோரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.