மதுரை: உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வியின் ஆதரவாளர்கள், அதிருப்தி திமுக வேட்பாளர் சகுந்தலா மனுத்தாக்கலை எதிர்த்து நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கான நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. உசிலம்பட்டி நகராட்சியை பொருத்த வரை மொத்தம் 24 உறுப்பினர்கள். ஆளும் தி மு க 12 இடங்களும் காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 9 இடங்களில் அதிமுகவும் இரண்டு இடங்களில் இரண்டு இடங்களில் அமமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் திமுக உசிலம்பட்டியின் நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் செல்வி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்கிடையே திமுகவைச் சேர்ந்த மற்றொரு நகர் மன்ற உறுப்பினரான சகுந்தலா என்பவர் இன்று தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைமை அறிவித்துள்ள வேட்பாளரை ஆதரிக்காமல் சகுந்தலா தன்னிச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார் என குற்றம்சாட்டி செல்வியின் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகர் மன்ற அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.