‘மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கேன்’ ; நகராட்சி கூட்டத்தில் பேசிய சுயேட்சை கவுன்சிலரை அடித்து உதைத்த திமுக கவுன்சிலர்கள்..!!

கரூர் ; தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பள்ளப்பட்டி நகராட்சி கூட்டத்தில் பேசிய சுயேட்சை கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சி, தற்போதைய திமுக ஆட்சியில் தான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், நகர்மன்ற தேர்தலையும் சந்தித்து 27 இடங்களில் 21 இடங்களை திமுக பிடித்து மெஜாரிட்டியை காட்டியது.

இந்நிலையில், மீதமுள்ள இடங்களில் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், எஸ்.டி.பி.ஐ கட்சி ஒன்றும், சுயேட்சைகள் மட்டும் 3 இடங்களை பிடித்தது. நகராட்சியின் முதல் பெண் தலைவராக முனைவர் ஜான் நியமிக்கப்பட்ட நிலையில், துணை தலைவராக பள்ளப்பட்டி நகராட்சியின் திமுக நகர செயலாளர் தோட்டம் பஷீர் அஹமது நியமனம் செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை பெண் நகர்மன்ற தலைவருக்கும், துணை தலைவரான ஆண் தலைவருக்கும் இடையே பிரச்சினை நீண்டு கொண்டே வந்தது.

இந்த நிலையில், இன்று பள்ளப்பட்டி நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் முனைவர் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 27வது வார்டு சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர் சாகுல் அமீது நகர்மன்றத்தில் எழுந்து, மக்கள் என்னை தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்துள்ளார்கள். ஆகவே அவர்களுக்காக பணியாற்றுவது எனது கடைமை, ஆகவே எனது வார்டு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை இந்த நகராட்சி செய்து தர கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று கூறினார்.

அப்போது, திடீரென்று நகர்மன்ற துணை தலைவரின் உறவினர்களும், திமுக கவுன்சிலர்களுமான 24வது வார்டு முஸ்தாக் அலி, 9வது உறுப்பினர் சாதீக் அலி, 2வது வார்டு உறுப்பினர் யாக்கூப், 16வது வார்டு உறுப்பினர் ஜமாலுதீன் ஆகிய திமுக வார்டு உறுப்பினர்கள் எழுந்து, சுயேட்சை உறுப்பினர் சாகுல் அமீதை, நகர்மன்றத்திலிருந்து வெளியே செல் என்பது போல, ஒருமையில் பேசி, சுயேட்சை கவுன்சிலரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட சுயேட்சை வார்டு உறுப்பினர் சாகுல் அமீது, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தனது வார்டு மக்கள், தன்னை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை கூட நகர்மன்றத்தில் பேச முடியவில்லையா..? என்றும், முன்விரோதம் காரணமாக நகர்மன்ற துணை தலைவர் தோட்டம் பஷீர் அஹமது அவர்களின் தீவிர ஆதரவாளர்களான மற்ற திமுக கவுன்சிலர்கள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் இஸ்லாமிய சமுதாய மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

34 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

1 hour ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

1 hour ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

2 hours ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

2 hours ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

This website uses cookies.