தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், திமுக கட்சியினரை மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதால், அவரின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாததை தொடர்ந்து திமுக வட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக வட்ட செயலாளர் கீதா செல்வ மாரியப்பன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கீதா செல்வ மாரியப்பன். இவர் காவல் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், திமுகவில் இளைஞர் அணியில் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது 39வது வட்டச் செயலாளராகவும், தூத்துக்குடி மேலூர் பத்திரகாளி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று கீதா செல்வ மாரியப்பனை மேலூர் பத்திரகாளியம்மன் அறங்காவல் குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தனது பதவியை ஏன் பறித்தீர்கள் என்று அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து கேட்பதற்காக வட்டச்செயலாளர் கீதா செல்வ மாரியப்பன் தூத்துக்குடி மாவட்ட திமுக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த அமைச்சர் கீதா ஜீவன், கீதா செல்வ மாரியப்பனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் கீதா செல்வ மாரியப்பன் கூறுகையில், “அமைச்சர் கீதா ஜீவன் தன் மீது வந்த புகாரை முறையாக விசாரிக்காமல், அறங்காவல குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறினார்.
மேலும், என்னை போன்ற ஆரம்ப கால திமுக விசுவாசிகளை உரிய முறையில் மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதாகவும், கட்சிக்காரர்கள் பார்க்க சென்றால், உட்கார்ந்து கொண்டு தங்களை உட்காரக்கூட சொல்லாமல் அவமதிப்பதால், அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட செயலாளராக இருப்பதால், அவரின் கீழ் பணிபுரிய விருப்பமில்லை. எனவே எனது வட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன், என அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.