சேலம் : சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளித்த வாக்காளர்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, தனது சொந்த மாவட்டமான சேலத்தில், வாழப்பாடி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றியும் பட்டியலிட்டு பேசினார்.
அவர் பேசியதாவது :- திமுகவின் 9 மாத ஆட்சி இருண்ட காலம். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நீட் தேர்வு ரகசியத்தை வைத்து கொண்டு அதிமுகவை ஏன் கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள்..? கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்கும் மக்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை போலீசாரே மிரட்டுகின்றனர். கீழே இருக்கும் சக்கரம் ஒருநாள் மேலே வரும். அப்போது, ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள், எனக் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.