திமுக கதாநாயகி.. அதிமுக சூப்பர் ஹீரோ : தேர்தல் அறிக்கையில் மாஸ் காட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அதிமுக தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 4 முக்கிய குழுக்களை அறிவித்தது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், ஓ.எஸ்.மணியன் , பா. வளர்மதி, செம்மலை பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அதில் “அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் கூட்டணி கூட்டணி குறித்து தெரிய வரும், தேர்தல் அறிக்கை குழு ஒன்று கூடி பணிகளை தொடங்கி உள்ளது. மக்களின் எண்ணம் மக்களின் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையாக அதிமுக தேர்தல் அறிக்கையில் இருக்கும்.
தினகரன் ஒரு தனிமரம் அதிமுக ஒரு தோப்பு, அனைவரும் நிழல் தரும் ஒரு ஆலமரம், அவர்கள் கூறும் கருத்துக்களை பெரிதாக பார்ப்பதில்லை. 2021 ஆம் ஆண்டு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கை பார்த்த மக்கள் ஏமாந்து விட்டன. இனி எதற்கும் மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்கள் நலன் சார்ந்த ஒரு தேர்தல் அறிக்கையாகவும், மாநில உரிமைகளை பேணி காக்கும் ஒரு தேர்தல் அறிக்கையாக அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.