மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத் தேர்தல் பொறுத்தவரை திமுகவுக்கு தோல்வி பயம் விட்டதாகவும், அந்த தொகுதி திமுக மாவட்ட செயலாளரே அதிருப்தியில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் பலப்பரிச்சைக்கான தேர்தல் இல்லை என்றும் வரும் 2024 ம் ஆண்டு நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தான் பாஜகவுக்கு பலப்பரிச்சையான தேர்தல் என குறிப்பிட்டார்.
ஈரோடு இடைத் தேர்தலை பொறுத்தவரை கூட்டணியில் அதிமுகவே பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதாலும்,தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இருக்க கூடாது,
திமுகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், என்ன தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணமெல்லாம் இடைத்தேர்தலில் வெளிவர தான் போகிறது என்றார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.