மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத் தேர்தல் பொறுத்தவரை திமுகவுக்கு தோல்வி பயம் விட்டதாகவும், அந்த தொகுதி திமுக மாவட்ட செயலாளரே அதிருப்தியில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் பலப்பரிச்சைக்கான தேர்தல் இல்லை என்றும் வரும் 2024 ம் ஆண்டு நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தான் பாஜகவுக்கு பலப்பரிச்சையான தேர்தல் என குறிப்பிட்டார்.
ஈரோடு இடைத் தேர்தலை பொறுத்தவரை கூட்டணியில் அதிமுகவே பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதாலும்,தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இருக்க கூடாது,
திமுகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், என்ன தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணமெல்லாம் இடைத்தேர்தலில் வெளிவர தான் போகிறது என்றார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.