இடப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய நபரை திமுக வழக்கறிஞர் மண்வெட்டி எடுத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
நெல்லை மாவட்டம் டவுன் மாதா கோவிலைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு நெல்லை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இப்படியிருக்கையில், சர்ச்சைக்குரிய நிலத்தில் சங்கர் கட்டிடப் பணியை மேற்கொண்டு வந்திருந்தார். இதனை விக்னேஷ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, சங்கரும், அவரது நண்பருமான திமுக வழக்கறிஞர் நவ்ஷாத் ஆகியோர் விக்னேஷை கண்மூடித்தணமாக தாக்கியுள்ளனர்.
இருதரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது திமுக வழக்கறிஞர் நவ்ஷாத், மண்வெட்டி எடுத்து விக்னேஷை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.