சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றிய போது, திடீரென அறுந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ, அருகிலிருந்தவரை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியும், சென்னை கொத்தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி மற்றும் அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றினார். அப்போது, எதிர்பாராத விதமாக, மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த தேசிய கொடி திடீரென அறுந்து விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அருகில் இருந்தவரை அடிக்க கையை ஓங்கிச் சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தேசிய கொடி அறுந்து விழுந்ததால், அருகில் இருந்தவரை திமுக எம்எல்ஏ ஒருவர், அருகில் இருந்தவரை தாக்க முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
This website uses cookies.