கரூர் பிரச்சாரத்தின் போது தனது தந்தை ஸ்டாலினைப் போலவே, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்த சம்பவம் திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில், புகளூர் நகராட்சிக்குட்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பேக்கரி கடையில் ஒன்றில் அவரே சென்று அந்த கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.
அப்போது அருகில் உள்ள பாட்டி மற்றும் சக டீக்குடிப்பவர்களையும் விசாரித்தார். எப்போதுமே, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆங்காங்கே பிரச்சாரமோ, அல்லது நிகழ்ச்சிக்கு செல்லும் போது, ஆங்காங்கே டீ கடைக்கு சென்று, “சூடா ஒரு டீ கொடுப்பா” என்று தான் கூறி வாங்கி அருந்துவார். ஆனால், அவரது பாணியில் அப்படியே மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளது இப்பகுதி மக்களிடையே பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…
90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…
ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…
This website uses cookies.