திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்பியுமான ஆ.ராசா மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இந்தச் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆ.ராசாவின் 15 சொத்துகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கோவை, சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை, நில அளவைத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சுமார் ரூ.5.85 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து அமலாக்கத்துறை அதனை முடக்கியுள்ளது. அதற்கான அறிவிப்பு பலகை வைத்து நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.