அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன்… சட்டரீதியாக எதிர்கொள்வேன் ; திமுக எம்.பி. ஆ. ராசா ஆவேசம்!!!
அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது :- 2023ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்துள்ளேன் என்கிறார் பிரதமர் மோடி. 53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது தமிழகம். தற்போது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன். சட்டரீதியாக எதிர்கொள்வேன், அமலாக்கத்துறை சோதனை சாதாரணமாக நடப்பது தான், என்றார்.
நேற்று திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துக்களுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.