பிரதமர் மோடி தமிழை நன்றாக கற்றுக்கொண்டு நல்ல தமிழில் பேச வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் கட்சிகள் உடைத்தெரி தெரியப்படும் என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது குறித்து நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இவ்வாறு சொன்ன பல பேர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,” என்றார்.
இது போன்ற நிறைய பேரை பார்த்து இருக்கிறோம் என்று கூறிய அவர், இதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. இதற்கெல்லாம் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
பிரதமர் தமிழகத்திற்கு தொடர்ந்து வருவதால் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றார்களே, அப்படித்தானே அவர்கள் சொல்லியாக வேண்டும். அப்படியாவது ஓட்டு கிடைக்காதா என்று சொல்லி வருகிறார்கள், என்றார்.
பிரதமர் தமிழில் பேசுவது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்ட அவர், தமிழை நன்றாக கற்றுக்கொண்டு நல்ல தமிழில் பேச வேண்டும், என்றார். இதுவரை இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி வந்த நிலையில், தமிழை கற்று கொள்ள வேண்டும் என்று பிரதமர் விரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, வரவேற்கிறோம், என கூறினார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.