இந்தியா என்றும் இந்தியா தான் என நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
வானவில் அறக்கட்டளை, சமூகச் செயல்பாட்டுக்கான ஆராய்ச்சி நிறுவனம் (ROSA), நாடோடி இனத்தவர் & பழங்குடிகள் தன்மேம்பாட்டு மையம் (TENT) ஆகியோரின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர் -ஆதியன், லம்படா, காட்டுநாயக்கர் ஆகிய நான்கு நாடோடிப் பழங்குடியினரிடையே விரிவான பங்கேற்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வறிக்கையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டு பேசினார். அப்போது, நாடோடிப் பழங்குடிகளுக்கான ஆய்வு என்பது மிக முக்கியமான ஆய்வு. தமிழ்நாட்டில் உள்ள இந்த இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் மாவட்டத்துக்கு மாவட்டம், தாலுகாவுக்கு தாலுகா மாறுதல் இருக்கிறது. இதனால் கல்வி பயில்வதில் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் தரப்பட்டு குறைகள் களையப்படும், என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசியதாவது :- இந்தியப் பிரதமர் என அழைக்கப்பட்டதை பாரதப் பிரதமர் என அழைப்பிதழ் அடித்திருக்கிறார்கள். சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. அதன் பின்னால் இருக்க கூடிய அரசியலை எதிர்க்க கூடிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சியினர் ஆரம்பித்துள்ள நிலையில் பெயர் அவர்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி இருக்கிறது.
சரித்திரத்தையே மாற்றுகிறார்கள். புதிய திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்கிறார்கள். இவர்களது செயல் எத்தனை இந்தியர்களின் மனதை புண்படுத்துகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும், என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.