பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்திருப்பதை திமுக எம்பி செந்தில் குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பாமக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் இருந்து கொண்டே வந்தது. காரணம், அதிமுகவும், பாஜகவும் தங்கள் பக்கம் பாமகவை இழுக்க முழு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக, பாஜவுடன் கூட்டணியை உறுதி செய்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு இழுபறிகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விழுப்புரம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாஜக – பாமக இடையிலான நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாக கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி, நாட்டின் நலன் கருதியும் மோடி நல்லாட்சி தொடரவும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் தொடர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர், சேலத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸும் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டனர்.
பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்ததை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், திமுக எம்பி செந்தில் குமாரும், கிண்டலடித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “கோடை கால மருத்துவ அட்வைஸ்: இயற்கையாக பழுக்கும் #மாம்பழத்தை பருகுங்கள். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழத்தினை கேடு விளைவிக்கும் என்ற அடிப்படையில் தவிர்ப்பது நன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.