தருமபுரி ; மாநில அளவிலான விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கொடிக்கு தருமபுரி எம்பி செந்தில்குமார் மரியாதை செலுத்தாத நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியிலுள்ள சப்தகிரி பொறியியல் தனியார் கல்லூரியில் இன்று மாநில அளவிலான 63வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செய்த பின்னர், அமைச்சர் பன்னீர்செல்வம் விளையாட்டு போட்டியினை துவக்கிவைத்து, மாணாக்கர்களின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னதாக, கொடியேற்றும் நிகழ்வின் போது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால், அமைச்சர் அருகிலே நின்று கொண்டிருந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தாத வீடியோ காட்சி தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.