அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதோடு, திமுகவுடன் மறைமுக உறவு வைத்து அதிமுகவை அழிக்க முயற்சித்ததாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும், திமுகவுக்கு மறைமுக தொடர்பு இருக்குமோ..? என்ற பேச்சும் அடிபடத் தொடங்கியது. இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்து குணமடைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்ததாகவே உள்ளது என்று கூறப்பட்டு வந்தது.
நேற்றிரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாக இருப்பதாக அமைந்துள்ளது. அதாவது, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதற்கான தீர்மானம் 2,500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு விட்டது. பெரும்பாலான ஆதரவு கொண்ட எடப்பாடி பழனிசாமி பக்கமே அதிமுக இருப்பதுதான் நிதர்சனமான உண்மை.
இதனை உணர்ந்து, பாஜக, பாமக தலைவர்கள், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த பதிவில், “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பதிவு அதிமுகவை கைப்பற்ற சட்டப்போராட்டம் நடத்தி வரும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே, ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக மறைமுக ஆதரவு கொடுத்து வருவது உறுதியாவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.