திமுக அமைச்சர்களுக்கு எதிராக ஆவணங்கள்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த பாஜக பிளான்!!!
தமிழக அமைச்சர்களான தங்கம் தென்னரசு , பொன்முடி உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முடித்துவைக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விசாரணை நடந்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதில் திருப்தி இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அமைச்சர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முடித்துவைக்கப்பட்ட வழக்கின் மீது மீண்டும் விசாரணை நடத்த தடைவிதிக்க வேண்டும் என அந்த மனுக்களில் கூறப்பட்டது.
இந்த மனுக்களின் விசாரணை இன்னும் துவங்கப்படாத நிலையில் , தமிழக பாஜக சார்பில் தனித்தனியாக கேவியேட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர்களின் சொத்துகுவிப்பு வழக்கு மேல்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என கேவியேட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , முன்னதாக திமுக அமைச்சர்கள் சொத்துப்பட்டியல் என தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் , கேவியேட் மனுக்களில் எந்த மாதிரியான ஆவணங்களை தமிழக பாஜக தாக்கல் செய்ய உள்ளது என்பது அடுத்தகட்ட விசாரணைகளின் போது தெரியவரும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.