அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர், துணை அதிபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோபைடன் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவின் பல்வேறு
பல்வேறு மாகாணங்களில் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ட்ரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தற்போது டொனால்ட் டிரம்ப் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக டிரம்ப் தரப்பு செய்தி தொடர்பாளர் குறிப்பிடும் போது இந்த கொடூர சம்பவத்தை அடுத்து விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் பாதுகாப்பு பணி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது நன்றி.இந்த சூழலில் மேலும் ஒரு நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட ட்ரம்ப்பை பாதுகாப்பு அதிகாரிகள் வேகமாக அழைத்துச் சென்றனர்.அப்போது டிரம்ப் கைகளை உயர்த்தி ஃபைட் ஃபைட் ஃபைட் என முழங்கினர் இதை கண்ட பொதுமக்கள் USA USA USA முழங்கினார்கள். கைகளை உயர்த்தியவாரு டிரம்ப் முழங்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை பற்றி ஜோ பைடன் குறிப்பிடும் போது பென்சில்வேனியாவில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் எனக்கு விரிவாக தகவல் அனுப்பி உள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று சீக்ரெட் சர்வீஸ் பத்திரப்படுத்தி உள்ளது எனும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த வன்முறையை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
This website uses cookies.