டாஸ்மாக் வருமானத்தை வைத்து நீங்க கொடுக்கும் இலவசம் வேண்டாம் : கொந்தளித்த இயக்குநர் பேரரசு!!

மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது தெருக் கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். ஆடியோ விழாவில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இயக்குநர் பேரரசு கூறுகையில் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள், படம் என்ன மாதிரியான கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள்.

முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம். வீரப்பன் மகளும் சினிமாவில் நடிக்கலாம். சினிமா யாரையும் ஏற்றுக் கொள்ளும்.

தெருக்கூத்து அழிந்து கொண்ட வருகிறது என்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை, குடிப்பவர்கள் ஆடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

விஜய், பிரபுதேவா ஆகியோரை விட குடிமகன்கள் சூப்பராக ஆடுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதே மதுவை கொடுத்துதான் ஓட்டு போட சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆலய மணி எழுதிய பாடலான சாராயம் அபாயம் என்பது நமக்கான அபாய மணியாகும். இந்த பாடலை டாஸ்மாக் கடைகள் முன்பு ஒலிக்கப்பட்டு கூட மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யலாம்.

மதுவிலக்கு கொண்டு வந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும் போது போதை பொருட்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை.

மதுவை விற்கலாம் என்றால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல கஞ்சா கடையும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆன்லைன் ரம்மியால் எங்கேயோ எப்போதோ ஓரிருவர் இறக்கிறார்கள். ஆனால் மதுவால் தினமும் இறப்பு சம்பவம் ஏற்படுகிறது.

ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள், ஏன் மதுவை ஒழிக்க குரல் கொடுக்கவில்லை? அதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். பெண்களுக்கு இவர்கள் கொடுப்பதாக சொல்லும் ரூ 1000 தேவையில்லை.
இவர்கள் அறிவித்த ஓசி பஸ்ஸும் தேவையில்லை. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என கூறுகிறீர்கள். ஏழை மாணவர்கள் நீட் தேர்வு எழுத நீங்களே ஏன் நீட் பயிற்சி அளிக்கக் கூடாது?

டாஸ்மாக் வருமானம்தான் அதிகமாக வருகிறது. எனவே அந்த காசில் மக்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம். அதன் மூலம் பாவத்தை மக்கள் தலையில் ஏற்ற வேண்டாம்.

இந்த மாவீரன் பிள்ளை படம் சமுதாயத்திற்கு எடுக்கப்பட்ட படம் என்றார். வீரப்பன் மகள் விஜயலட்சுமிக்கு நடிக்க வேண்டும் என்பது சிறு வயது விருப்பமாக இருந்ததாகவும் அது இப்போது நிறைவேறியதாகவும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.