நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளை கேட்டுள்ளது. அதேபோல, 12 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தேமுதிக நிபந்தனை போட்டுள்ளது.
இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க அதிமுக மற்றும் பாஜக மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 4 தொகுதிகள் வரை ஒதுக்கலாம், ஆனால் ராஜ்யசபா சீட் வழங்க முடியாது என இரு கட்சிகளும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை என தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை தேர்வு செய்து தேமுதிக விருப்பப்பட்டியலை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் ஏற்கனவே கூட்டணியில் அதிக கட்சிகள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுக்கவே பெரும் சிக்கலில் திமுக இருந்து வருகிறது. இப்படியிருக்க, திமுக பக்கம் தேமுதிக சென்றால், ஒரு தொகுதியோ அல்லது 2 தொகுதியோத தான் கிடைக்கும். எனவே, திமுக கூட்டணியில் தேமுதிக செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு.
மேலும், கடந்த காலங்களை காட்டிலும் தற்போது தேமுதிகவுக்கு வாக்கு வங்கி குறைந்து விட்டது என்பதால், தனித்து போட்டியிடுவது என்பது முடியாத காரியம். ஆகவே, அதிமுக அல்லது பாஜகவில் ஒதுக்கப்படும் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதே அந்தக் கட்சிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக கருதப்படுகிறது.
அதேவேளையில், கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அனுதாப ஓட்டுக்கள் விழும் என்ற நம்பிக்கையில் தேமுதிக ஏதேனும் வித்தியாசமான முடிவுகளை எடுக்குமா..? என்பதனையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.