சென்னை வியாசர்பாடி முல்லை நகர் அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அதிமுக பகுதிச் செயலாளர் அவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமி பள்ளி செல்வதற்காக முல்லை நகர் இடுகாடு வழியே சென்று கொண்டிருந்தார்.
அங்கே கஞ்சா போதையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியை சைகை காட்டி வழிமறித்து தகாத வார்த்தை பேசி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தச் சிறுமி கத்திக் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கஞ்சா போதை நபருக்கு தர்ம அடி கொடுத்து மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் பெயர் சுந்தர் எனவும் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.