சென்னை : சென்னையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சென்னை கொருக்குப் பேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக சரக்கு பெட்டக ரயிலின் என்ஜின் சென்றுள்ளது. அப்போது, தண்டவாளத்தின் மீது இளைஞர்கள் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ஓட்டுநர், அவர்களை விலகச் செய்வதற்காக, ஒலிபெருக்கியை ஒலிக்க செய்துள்ளார்.
அதில், மது போதையில் இருந்த ஒரு இளைஞர், தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து ரயில் மீது வீசி ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
அந்த இளைஞரின் நண்பர்கள் தடுத்தும் கூட, நிற்க முடியாத அளவுக்கு போதையில் இருந்த அந்த நபர், கற்களை வீசி தாக்கியுள்ளார். இதில், ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் வீக்கம் ஏற்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
போதை ஆசாமியின் இந்த அராஜகத்தை ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை மத்திய இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.