திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஜங்சனில் மது பிரியர் ஒருவர் ஃபுல் போதையில் தடுமாறி வந்து அதிக வாகனம் செல்லக்கூடிய நடு ரோட்டில் மல்லாக்க விழுந்து படுத்துக்கொண்டார்.
மீண்டும் எழுந்து நடக்க முயன்ற போது மீண்டும் மல்லாக்க விழுந்தார்.அவ்வழியே சென்ற இரண்டு பேர் மது பிரியரை சாலையோரம் அமர வைக்க முயற்சித்த போது இரவு நேர ரோந்து காவலர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.அங்கு வந்த காவலர்களோ ஏன்பா என்ன ஆச்சு? எனக் கேட்க என்னை அடித்து விட்டார்கள் என்று கூறினார்.
போலீசாரோ அன்பாக பேசி நாங்க வந்திருக்கோம்ல எந்திரிப்பா எனக்கூறி அருகில் இருந்தவர்களை அழைத்து இழுக்க முடியாமல் இழுத்துசாலை ஓரத்தில் படுக்க வைத்தனர்.
மீண்டும் எழுந்த மது பிரியரோ சார்..நல்லவங்களுக்கு உதவி பண்ண மாட்றீங்க கெட்டவங்களுக்கு தான் உதவி பண்றீங்க எனக்கூறி அந்த இடத்திலேயே மட்டை ஆகினார்.இந்த நள்ளிரவு சம்பவத்தால் அங்கு இருந்தவர்களிடையே வேடிக்கையாக இருந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.