டிரெண்டிங்

திருப்பதி மலைப்பாதை மூடல்.. கனமழை எதிரொலியால் தேவஸ்தானம் முடிவு!

கனமழை எதிரொலியால் திருப்பதி திருமலையில் மலைப்பாதையை நாளை வரை மூட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமாளா ராவ் காணொளி காட்சி மூலமாக அதிகாரிகளுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பேசிய ஷியாமளா ராவ் கனமழை காரணமாக வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையை நாளை 17 ம் தேதி முழுவதும் மூடி பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தேவஸ்தானத்தில் ​​பேரிடர் மேலாண்மைத் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் பல ஆலோசனைகளும் வழங்கி பேசுகையில் கனமழையின் போது பணியாளர்கள் விழுப்புடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மலைச்சரிவுகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொண்டு மலைப்பாதை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மின்சாரம் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனரேட்டர்களுக்கு டீசல் தட்டுபாடு இல்லாமல் இருக்க மின் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு பக்தர்களின் தரிசனம், தங்குமிடம், பிரசாதம் போன்ற அன்றாட செயல்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று வழியைக் ஏற்பாடு செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மருத்துவத் துறை ஆம்புலன்ஸ் வசதி செய்து ஊழியர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும். நீர்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்க பொறியியல் துறைக்கு உத்தரவிட்டார்.

மலைப்பாதை மண் சரிவு ஏற்பட்டால் உடனடியாக அகற்ற ஜேசிபிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து போலீசார், பொறியியல் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஏதேனும் அவசரச் சூழல் ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

வானிலை தகவல்களை வைத்து பக்தர்களை எச்சரிக்கும் வகையில் ஊடகம், சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் தொடர்பு துறை அறிவுறுத்தினார்.

பாபவினாசனம் மற்றும் சீலா தோரணம் வழித்தடங்களை ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. வானிலை நிலையைப் பொறுத்து இந்த வழித்தடங்களில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் இணை செயல் அதிகாரிகள் கௌதமி, வீரபிரம்மம், முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், முதன்மை பொறியாளர் சத்திய நாராயணா மற்றும் பிற துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

15 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

15 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

16 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

16 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

17 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

17 hours ago

This website uses cookies.