கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு பைக் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். கோவிலில் போதிய இடவசதி இல்லாததால் அதிக அளவில் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.
மேலும் படிக்க: அதிகாலையில் அலறிய குழந்தைகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் : நள்ளிரவில் நடந்த கொடூரம்!
இதன் காரணமாக முக்கிய விசேஷ நாட்களில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கார், நான்கு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் பேருந்தில் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் அறங்காவலர் குழு சார்பில் மலைப் பாதையில் செல்ல கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதன்படி காலை 6:00 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் மதியம் ஒரு மணி முதல் மாலை 6:00 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களுக்கு என நாளொன்றுக்கு 300 சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் இ.பாஸ் நடைமுறை குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் கோவில் அலுவலகத்திற்கு தபால் மூலம் அல்லது இணையதளம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.