பண்ணாரி சோதனைச்சாவடியில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்பதால் இரவு 9 மணிக்குள் பண்ணாரி செக்போஸ்டை நெருங்குவதற்காக வேகமாக சென்ற கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் முருகன் கோயில் வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி எதிரே வந்த தக்காளி பிக்கப் சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் மோதியது.இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி உருக்குலைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 5 பேரில் ஈரோட்டைச் சேர்ந்த முகில் நிவாஷ் , கால்பந்து வீரர் தர்மேஷ், கல்லூரி மாணவர் ரோகித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
அங்கிருந்த கிராமமக்கள் உதவியுடன் போலீசார் விபத்தில் உயிரிழந்த முகில் நிவாஷ் சகோதரர் ஆதி ஸ்ரீவாசன் (18), ஸ்ரீனிவாஷ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவிக்கு பின், மேல்சிகிச்சைக்காக ஈரோடு, கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.