குவாரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், போலி பில்களை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தில் உள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மணல் குவாரி விவகாரத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்த்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் 30ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2006-11 திமுக ஆட்சியின் போது, கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது, சட்டவிரோதமாக அவரது மகன் கௌதம சிகாமணிக்கு செம்மண் குவாரிகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அண்மையில், இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திமுக அமைச்சர், எம்எல்ஏக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அமலாக்கத்துறை முயற்சிப்பது ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.