அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்” அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 3ம் தேதி காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
மாலை 6 மணி வரை தொடர்ந்து, 10 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து சில ஆவணங்களை இரண்டு பைகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்று சோதனை நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து, சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் இடையே டைல்ஸ் ஷோரூமுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் அதிகாரிகள் சில ஆவணங்களை நகல் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, நாமக்கல் பரமத்திவேலூரில் காளியப்பன்ன என்பவரின் வீடு மற்றும் நிதி நிறுவன அலுவலகத்திலும் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளார்.
கணக்கில் வராத ரூ.16.6 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 60 நிலங்கள் தொடர்பாக சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஏற்கனவே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அவர் தொடர்புடைய இடங்களில் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.