என்எல்சி விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏவை கைது செய்த நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் – என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு வளையமான்தேவி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் இறங்கியது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலத்திற்கான உரிய இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை எனவும், என்எல்சி கூறும் நிரந்தர பணி பற்றியும் உறுதியான தகவல் வெளியாகவில்லை என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களுடன் அதிமுக நடத்தியது. இந்த போராட்டத்தில், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண் மொழி தேவன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தின் போது, வளையமான்தேவி கிராமத்திற்குள் அதிமுக எம்எல்ஏ நுழைய முயன்றார். அப்போது, காவல்துறையினர் தடுத்து அவரை கைது செய்தனர்.
அதிமுக எம்எல்ஏ கைது சம்பவத்திற்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- என்எல்சி நிறுவனத்தின் கைப்பாவையாக மாறி, தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ள இந்த விடியா திமுக அரசு. 110 நிறுவனத்திற்கு நிலம் தர மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் புவனகிரி, கம்மாபுரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மக்களை, அவர்களது வீடுகளிலேயே காவல் துறையினரால் சிறைபிடிக்கப்பட்டது வெட்கக்கேடானது.
இதனை எதிர்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.