நகைக்கடன் செய்த வங்கிகளுக்கு தொகையை உடனே வழங்குக : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை ; 5 பவுனுக்கு குறைவாக நகைக்‌ கடன்‌ பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2019-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப்‌ பொதுத்‌ தேர்தலின்‌ போதும்‌, 2021-ல்‌ நடைபெற்ற சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலின்‌ போதும்‌, 5 பவுன்‌ வரை கூட்டுறவு வங்கி மற்றும்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்‌ அடமானம்‌ வைத்து வாங்கிய நகைக்‌ கடன்கள்‌ அனைத்தும்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்று அப்போதைய எதிர்கட்சித்‌ தலைவராக இருந்த, இப்போதைய முதலமைச்சரும்‌, அவரது மகனும்‌ மேடைதோறும்‌ பேசினார்கள்‌.

அவர்களின்‌ பேச்சை நம்பி சுமார்‌ 48 லட்சத்து 85 ஆயிரம்‌ நபர்கள்‌ தங்களது நகைகளை கூட்டுறவு வங்கியில்‌ அடமானம்‌ வைத்து கடன்‌ வாங்கி உள்ளார்கள்‌. ஆனால்‌, இந்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்தவுடன்‌ நகைக்‌ கடன்‌ தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது. இந்தப்‌ புதிய நிபந்தனைகளின்படி சுமார்‌ 35 லட்சத்து 38 ஆயிரம்‌ நபர்கள்‌ நகைக்‌ கடன்‌ தள்ளுபடிக்கான தகுதியினைப்‌ பெறவில்லை என்றும்‌, சுமார்‌ 13 லட்சத்து 37 ஆயிரம்‌ நபர்கள்‌ மட்டுமே நகைக்‌ கடன்‌ தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்கள்‌ என்றும்‌, அவர்களுக்கு மட்டுமே நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்றும்‌ ஆணை பிறப்பித்தது.

இதனை அடுத்து, தொடக்க வேளாண்‌ கூட்டுறவு கடன்‌ சங்கங்களுக்கு நகைக்‌ கடன்‌ தள்ளுபடிக்கான தொகையினை இந்த அரசு வழங்கி இருக்க வேண்டும்‌. ஆனால்‌, அப்பணத்தைத்‌ தராமல்‌, அந்தந்த சங்கங்களில்‌ உள்ள வைப்பு நிதியினை, நகைக்‌ கடன்‌ தள்ளுபடிக்கும்‌, அன்றாட பணிகளுக்கும்‌ பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியதாகச்‌ செய்திகள்‌ கூறுகின்றன.

இதனால்‌, தமிழகத்தில்‌ கூட்டுறவுத்‌ துறையின்‌ கீழ்‌ வரும்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ உரம்‌, விதை போன்ற விவசாயக்‌ கடன்கள்‌ வழங்குதல்‌, அவசர கால நகைக்‌ கடன்‌ வழங்குதல்‌, முதிர்ச்சியடைந்த வைப்பு நிதிக்கான தொகையினை உரியவருக்கு வழங்குதல்‌ போன்ற அன்றாடப்‌ பணிகளுக்குக்‌ கூட போதிய நிதி இல்லாமல்‌ திண்டாடி வருகின்றன. நிதி இல்லாததால்‌, வாடிக்கையாளர்களுக்கும்‌, கூட்டுறவு கடன்‌ சங்கங்களில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கும்‌ தேவையற்ற சச்சரவுகள்‌, வீண்‌ விவாதங்கள்‌ எழுந்தன. கூட்டுறவு கடன்‌ சங்கங்களே இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியது.

எனவே, சங்க அலுவலர்கள்‌ நகைக்‌ கடன்‌ தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக வழங்கக்‌ கோரி இந்த விடியா அரசிடம்‌ கோரிக்கை விடுத்து வந்தனர்‌. ஆனால்‌, இதுவரை இந்த அரசு நகைக்‌ கடன்‌ தள்ளுபடிக்கான தொகையினை
கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை. ஐந்து பவுன்‌ வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்த சுமார்‌ 4,450 கூட்டுறவு வங்கிகள்‌ மற்றும்‌ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கங்கள், அச்சங்கங்கள்‌ தள்ளுபடி‌ செய்த தொகையை உடனே வழங்கவும், அந்த சங்கங்கள் வைத்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும்‌ இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

18 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.