சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் இபிஎஸ் தரப்பினர் நடத்தி முடித்து விட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு இபிஎஸ்ஸை தவிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புது மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதாவது, அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காகவும் விசாரிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலர் தேர்தல் ஆகியவற்றிற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்மூலம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கம் செய்து நீதிபதி உத்தரவை பிறப்பித்ததுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்தார். இதனிடையே, ஓபிஎஸ் தரப்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு நாளையே இருநீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு இன்றே வெளியிடப்படும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வழங்கினர்.
பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு வருகின்றனர். மேலும், போட்டியின்றி தேர்வான எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் வாழ்த்து முழக்கம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டார்.
இன்றைய தேர்வின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 6வது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, எம்ஜிஆர், நாவலர் நெடுஞ்செழியன், சண்முகம், ராகவானந்தம், ஜெயலலிதா ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்துள்ளனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.