தேனியில் கோடநாடு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புது திட்டத்தை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து விட்டது. இதையடுத்து, டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்து விட்டார்.
இதனிடையே, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கலந்து கொண்டனர்.
அப்போது, மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :- கோடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும், என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுகவின் கொடி மற்றும் கட்சிப் பெயரை பயன்படுத்தினர். ஏற்கனவே, அதிமுக கொடி மற்றும் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த சூழலில், மீண்டும் கொடி மற்றும் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தியதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக தங்களது கட்சி கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.