அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வருகை தந்தார். பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக சேலம் வந்த அவருக்கு மாவட்ட எல்லையில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர். திருவாக்கவுண்டனூர் பகுதியில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அழைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சேலம் மாநகரின் மையப் பகுதியில் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்ப மரியாதை என உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்து முடிவு செய்வது மத்தியில் உள்ளவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்றும், அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டதாக தெரிவித்தார். மேலும், அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தின் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை எனவும் தெரிவித்தார்.
எம்ஜிஆர் கட்சியை துவங்கும் போது பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும், அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும் கூறிய எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் தலைவர்களும் எவ்வளவு சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள், என தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.