சென்னை : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜிஆர் வெங்கடேசனின் தந்தை, லயன்ஸ் அம்பலம் ராஜபாண்டியன் நாடாரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நாட்டினுடைய தலையெழுத்தை வரும் நாட்களில் மாற்ற வேண்டும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பொற்காலம். அவருடன் இருப்பது தமக்கும் பாஜகவிற்கும் பெருமை. ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் எதிர்பார்ப்பார்களோ, அதுபோன்ற முதல்வராக இருந்து செயலாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சிக்காக மக்கள் ஏங்குகின்றனர்,” எனக் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.