சென்னை : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜிஆர் வெங்கடேசனின் தந்தை, லயன்ஸ் அம்பலம் ராஜபாண்டியன் நாடாரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நாட்டினுடைய தலையெழுத்தை வரும் நாட்களில் மாற்ற வேண்டும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பொற்காலம். அவருடன் இருப்பது தமக்கும் பாஜகவிற்கும் பெருமை. ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் எதிர்பார்ப்பார்களோ, அதுபோன்ற முதல்வராக இருந்து செயலாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சிக்காக மக்கள் ஏங்குகின்றனர்,” எனக் கூறினார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.