சேலம் : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு அதிகரித்து வருவதாகவும், ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் நிலத்தை பறித்து விடுவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த அதிமுக ஆட்சியின் போது நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, எச்சரிக்கை பலகைகளை வைத்தோம். கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு சேர்ந்து ‛நில அபகரிப்பு’-ம் வந்து விடுகிறது. எங்காவது ஏமாந்தவர்கள் இருந்தால், அவர்களின் நிலத்தை ஆட்டையை போட்டுவிடுவார்கள். அதிமுக – பா.ஜ.க உறவில் எந்த விரிசலும் இல்லை.
அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளால் கொள்ளை புறம் வழியாக ஆட்சியை பிடித்துள்ளது திமுக. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ‛செவிடன் காதில் ஊதிய சங்கு’ போலதான் இந்த அரசு செயல்படுகிறது, எனக் கூறினார்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.