தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகாருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்கப் போகிறாரா?, என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் அவர்பேசியதாவது :- அம்மா மினி கிளினினக் உள்ளிட்ட நல்ல திட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது. ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக நிறைவேற்றியுள்ளது.
7.5% ஒதுக்கீடு கொண்டு வந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழி செய்யப்பட்டது. வீட்டு வரி, மின்கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது ஏன்..? 2 கோடியில் சிலை வைத்து விட்டு, 80 கோடியை மாணவர்களுக்கு செலவிடலாமே..? தலைவாசல் கால்நடை பூங்கா திட்டத்தை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.
மக்களுக்காக உழைக்கின்ற, சேவை செய்கிற கட்சி அதிமுக தான். தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகாருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்கப் போகிறாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
This website uses cookies.