மயிலாடுதுறை : தமிழகத்தில் அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து ஆசிபெற்றார்.
அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- மதம் மற்றும் கோவில் சம்பந்தமான விஷயங்கள் குறித்து முழு விபரம் தெரிந்த பிறகுதான் கூற முடியும். அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும். பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கால வழிமுறைகள் மற்றும் கோவில் வழிமுறைகளில் அரசு தலையிடக் கூடாது.
ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க இந்த அரசு முயற்சிக்கிறது. 500 ஆண்டுகாலமாக பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், அதற்கு திமுக அரசு தடை விதித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு இறங்கிவந்து அனுமதி கொடுத்தது.
மாற்று ஏற்பாடுகள் செய்வதாக கூறும் திமுக அரசின் ஆட்சி அடுத்த ஆண்டு இருக்கிறதா..? என்பதை பார்க்கலாம். ஆண்டவன் என ஒருவன் இருக்கிறான். தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக அதற்கான பதிலடி கிடைக்கும். திமுக அரசு எதைபற்றியும் கவலைப்படவில்லை. குடும்பம் செழிக்க வேண்டும். எந்தெந்த துறையில் வருமானம் வரும் என்று பார்க்கின்றனர்.
மக்களை பற்றியும், விவசாயிகள் பற்றியும் சிந்திக்கவில்லை. சசிகலா அதிமுக.,வில் உறுப்பினர் இல்லை. அவருக்கும், அதிமுக.,விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எனக் கூறினார்.
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
This website uses cookies.