அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் 3.21 கோடி மதிப்பில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்தார்.
இதில் சேலம் எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி ஜலகண்டாபுரம் கொங்கணாபுரம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், நங்கவள்ளி, காடையாம்பட்டி ஆகிய மூன்று ஒன்றியங்கள் என பல்வேறு பகுதிகளில் 3.21 மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில், “சேலம் எடப்பாடி தொகுதி மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் சேலம் எடப்பாடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது. எடப்பாடி தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளோம்,” தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.