கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோவில் உண்மைத்தண்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அதை எதிர்த்து அண்ணாமலை சவால் விட்டிருந்தார். அதே போல ஆளுநரிடம் இது குறித்து தமிழக பாஜக குழு புகார் அளித்திருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வழக்கறிஞர் பாபுமுருகவேல், தமிழ்நாடு மற்றும் மத்திய விஜிலென்சான சிபிஐ , அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு நேற்று ஒரு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அந்த கடித்ததில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகவும், அந்த குரல் பதிவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பெருமளவில் பணம் சேர்த்து விட்டதாகவும் கூறப்பட்ட ஆடியோவை பற்றி விலாவரியாக குற்றச்சாட்டுகளோடு குறிப்பிட்டு இருக்கிறாராம்.
மேலும் அந்த கடிதத்தில், பிடிஆரின் குரல் பதிவின் தொடர்ச்சியாக இருப்பதைப் போல மேலும் ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் நேற்றில் இருந்து பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் குற்றம் சுமத்தப்படும் நபர் ஒரு தமிழ்நாட்டினுடைய அமைச்சர், குற்றத்தை சொல்பவரும் தமிழ்நாட்டினுடைய அரசாங்கத்தினுடைய ஒரு அமைச்சர்.
எனவே இதனுடைய உண்மை தன்மையை கண்டறிந்து இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார். இதே புகார் மனுவை கவர்னரை சந்தித்து தரப்போவதாக ஏற்கனவே எடப்பாடி சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.